Advertisement

பவர் பிளே ஓவர்களில் நாங்கள் அதிகமான ரன்களை கொடுத்துவிட்டோம் - ருதுராஜ் கெய்வாட்!

ஒரு கேட்ச்சை தவற விட்டோம். ஒரு ஓவரில் ரன்களை வாரி வழங்கினோம். இருப்பினும் போட்டியை நாங்கள் 19ஆவது ஓவர் வரை எடுத்துச் சென்றது மகிழ்ச்சியளிக்கிறது என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 06, 2024 • 12:06 PM
 பவர் பிளே ஓவர்களில் நாங்கள் அதிகமான ரன்களை கொடுத்துவிட்டோம் - ருதுராஜ் கெய்வாட்!
பவர் பிளே ஓவர்களில் நாங்கள் அதிகமான ரன்களை கொடுத்துவிட்டோம் - ருதுராஜ் கெய்வாட்! (Image Source: Google)
Advertisement

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து. இதையடுத்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

இதில் தொடக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா 12, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 26 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜிங்கியா ரஹானே 35 ரன்களையும், ஷிவம் தூபே 45 ரன்களையும் சேர்க்க, இறுதியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 31 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். 

Trending


இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களும் விளாசி 12 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிச்கர்கள் என 37 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.  பின்னர் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றனர். 

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐடன் மார்க்ரம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, அடுத்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென், நிதீஷ் சர்மா இணை அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஸ்கே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “இப்போட்டியைப் பொறுத்தவரையில் பிட்ச் மிகவும் மெதுவாக இருந்தது. அவர்கள் கடைசி நேரத்தில் சிறப்பாக பந்து வீசி எங்களை கட்டுக்குள் வைத்திருந்தனர். ஆரம்பத்தில் நன்றாக விளையாடினோம் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் இறுதியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி எங்களை குறைந்த ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். 

மேலும் நேரம் செல்ல செல்ல அது நாங்கள் எதிர்பார்த்ததை விட பிட்ச் மெதுவாக இருந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பவுண்டரி எல்லைகளை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் பவர் பிளே ஓவர்களில் நாங்கள் அதிகமான ரன்கள் கொடுத்தோம். ஒரு கேட்ச்சை தவற விட்டோம். ஒரு ஓவரில் ரன்களை வாரி வழங்கினோம். இருப்பினும் போட்டியை நாங்கள் 19ஆவது ஓவர் வரை எடுத்துச் சென்றது மகிழ்ச்சியளிக்கிறது.

இப்போட்டியில் நாங்கள் 170 - 175 ரன்கள் அடித்திருந்தால் கூட எங்களுக்கான வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும். கடைசி நேரத்தில் கொஞ்சம் பனியின் தாக்கம் இருந்ததால் எங்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போட்டியில் மொயீன் அலி சிறப்பாக பந்துவீசினார்.  அதனால் ஆட்டத்தின் போது ஆடுகளம் பெரிதாக மாறவில்லை என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement