
ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இதுவரையில் 16 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வாரியத்தால் மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, உலக டி20 லீக்குகளில் முதன்மையான இடத்தில் இருக்கிறது. 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் சீசனில், யாரும் எதிர்பார்க்காத விதத்தில், ஆஸ்திரேலியாவின் மறைந்த லெஜெண்ட் சுழற் பந்துவீச்சாளர் சேன் வார்ன் கேப்டனாகவும் பயிற்சியாளராகவும் இருந்து வழிநடத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியனாகி அசத்தியது.
அதற்குப் பிறகு அந்த அணிக்கு பெரிதான ஐபிஎல் செயல்பாடு கிடையாது. ராகுல் டிராவிட் வார்னேவுக்குப் பிறகு கேப்டனாக இருந்து குறிப்பிடும் வகையில் செயல்பட்டு இருக்கிறார். இந்த நிலையில்தான் சில ஆண்டுகளுக்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் கொண்டுவரப்பட்டார். அவரின் சில முடிவுகளின் படி சஹால் மற்றும் அஸ்வின் ஆகியோர் அணிக்குள் கொண்டுவரப்பட்டு, கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கும் சென்றது.
அவருடைய தலைமையின் கீழ் அணி தற்போது நல்ல முறையில் கட்டப்பட்டும் இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் சஞ்சு சாம்சனின் கேரளாவை சேர்ந்த, மேலும் அவரது மாநில அணியில் சஞ்சு சாம்சனை கேப்டனாக வழி நடத்திய ஸ்ரீசாந்த், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து சஞ்சு சாம்சனை நீக்க வேண்டும் என்று அதிரடியாக கூறியிருக்கிறார்.