
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் பாகிஸ்தானிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடைபெறவுள்ளது. இதில் இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்ததன் காரணமாக இத்தொடரானது ஹைபிரிட் மாடலில் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனால் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்க அணியானது பிப்ரவரி 21ஆம் தேதி கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக தங்கள் முதல் லீக் போட்டியில் விளையாடவுள்ளது. இநிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கொப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை தென் ஆப்பிரிக்க அணி தவிர்க்கும் மாறும் அந்நாட்டு விளையாட்டு அமைச்சர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.