-mdl.jpg)
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரில் இரு அணியிம் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்ததுடன், கோப்பையையும் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷன் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் நந்த்ரே பர்கர் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரீஸா ஹென்றிக்ஸ் - டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரீஸா ஹென்றிக்ஸ் மற்றும் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டுசென் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி அர்ஷ்தீப் சிங்கின் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.