
ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வென்றது. இதன்மூலம் ஜோஹன்னஸ்பர்க் வான்டரரஸ் மைதானத்தில் கடந்த 30 ஆண்டுகளில் முதல் வெற்றியை தென் ஆப்பிரிக்க அணி பதிவு செய்தது.
தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது அந்த அணியின் பந்துவீச்சாளர்கள்தான். ரபாடா, ஜேஸன், ஒலிவர் ஆகியோர் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை முதல் இன்னிங்ஸில் சிதைத்துவிட்டது. முதல் இன்னிங்ஸில் இ்ந்திய அணியை 200 ரன்களில் சுருட்டியதுதான் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு முதல்படியாக அமைந்தது.
செஞ்சூரியன் மைதானத்தில் சுமாராகப் பந்துவீசிய ரபாடாவின் பந்துவீச்சில் ஃபயர் தெரிந்தது. அவரின் பந்துவீச்சை சமாளித்து விளையாட இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள் முக்கியக் காரணம் என்றாலும், அதில் முதலாமானவர் ரபாடா. கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் ரபாடா 13 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னிலையில் இருக்கிறார்.