
'Sachin would have made 1 lakh runs': Shoaib Akhtar slams ICC for extra leverage to batters in curre (Image Source: Google)
கிரிக்கெட் விதிகள் எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருந்துவருகிறது என்ற கொதிப்பும் ஆதங்கமும் எப்போதுமே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உண்டு. அதிலும் இன்றைய காலக்கட்டத்தில் கிரிக்கெட் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களின் ஆட்டமாக மாறிவிட்டது.
குறிப்பிட்ட சில ஓவர்களில் ஃபீல்டிங் கட்டுப்பாடுகள், ரிவியூ ஆப்சன்கள், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் 2 புதிய பந்துகள் ஆகிய விதிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதாக எப்போதுமே விமர்சித்துவந்திருக்கிறார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர்.
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடனான தனது யூடியூப் சேனல் உரையாடலின்போதும் இதுகுறித்து பேசினார் அக்தர்.