
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது 14ஆவது ஐபிஎல் தொடரானது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இந்த தொடர் முடிந்த சில நாட்களிலேயே, அக்டோபர் 17ஆம் தேதி உலக கோப்பை டி20 தொடரானது தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இந்திய அணியும் கடந்த மாத தொடக்கத்தில் அணியை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஃபார்ம் அவுட்டில் இருந்த காரணத்தினால் பிசிசிஐ சற்று வருத்தத்தில் இருந்தது. இருப்பினும் தொடரின் முடிவில் இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள் ஓரளவு சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களது திறமையை நிரூபித்துள்ளனர். இதற்கிடையில் இந்திய அணியை பெரிய வருத்தத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு விசயமாக ஹார்டிக் பாண்டியா, ராகுல் சஹார் ஆகியோரது ஃபார்ம் பார்க்கப்படுகிறது.
ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே பந்து வீசாமல் இருந்து வரும் இவர் பேட்டிங்கிலும் சொதப்பி வருகிறார். உலகக்கோப்பை அணியில் ஆல் ரவுண்டராக சேர்க்கப்பட்ட பாண்டியா இந்த தொடரில் பந்து வீசுவாரா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் பந்து வீசவில்லை என்றால் மாற்று வீரர் நிச்சயமாக இந்திய அணியில் சேர்க்கப்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் பாண்டியாவின் உடல் தகுதியை சரிபார்க்க பிசிசிஐ அக்டோபர் 15ஆஆம் தேதி கெடு விதித்துள்ளது.