
நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றின் முதல் குவாலிஃபையர் போட்டியில் நேற்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணியானது பட்லர், சஞ்சு சாம்சன், படிக்கல் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 என்கிற பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கியது.
பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குஜராத் அணியின் கேப்டன் பாண்டியா ஆட்டமிழக்காமல் 40 ரன்களும், டேவிட் மில்லர் 38 பந்துகளில் அதிரடியாக விளையாடி 68 குவித்து அசத்தினார்கள்.