
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் எட்டு அணிகளும் இரு குழுக்களாக பிரிந்து இத்தொடரை எதிர்கொள்கின்றனர்.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணியை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
டெம்பா பவுமா தலைமையிலான இந்த தென் ஆப்பிரிக்க அணியில் கயத்தில் இருந்து மீண்டள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் அன்ட்ரிச் நோர்ட்ஜே, லுங்கி இங்கிடி ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். இதுதவிர்த்து டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸட்ப்ஸ், வியான் முல்டர் மற்றும் ரியான் ரிக்கெல்டன் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேற்கொண்டு டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், மார்கோ ஜான்சென், காகிசோ ரபாடா ஆகியோரும் தங்களது இடத்தை உறுதிசெய்துள்ளனர்.