
shakib-al-hasan-all-time-ipl-xi (Image Source: Google)
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எஞ்சிய போட்டிகள் வரும் 19ஆம் தேதி முதல் அமீரகத்தில் நடக்கின்றன. இதற்காக அனைத்து அணிகளும் அமீரகம் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில், கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் வங்கதேச அணி வீரர் ஷகிப் அல் ஹசன், ஐபிஎல்லின் ஆல்டைம் பெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார்.
அவரது அணியில் ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ள ஷகிப் அல் ஹசன், 3ஆம் வரிசையில் கோலியையும், 4ஆம் வரிசை வீரராக ரெய்னாவையும் தேர்வு செய்துள்ளார்.