
தற்பொது 39 வயதான ஜூலான் கோஸ்வாமி இந்திய அணிக்காக 12 டெஸ்ட், 68 டி20 மற்றும் 203 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டும் இந்திய மகளிர் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுகமான ஜூலன் கோஸ்வாமி, சர்வதேஅ ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார்.
நெடு நாட்களாக அவரது ஓய்வு முடிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில், கடைசியாக அவர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை தொடரில் விளையாடி இருந்தார். அதன் பிறகு தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். மேலும் இத்தொடருடன் தாம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 10 ஓவர்கள் முழுவதுமாக வீசி வெறும் 20 ரன்களை தான் கொடுத்திருந்தார். இதில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார்.