
Shoaib Akhtar on Mumbai Indians' dismal start to IPL 2022 (Image Source: Google)
நடப்பு ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணிகளாக அறியப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் தொடர்ந்து 3 போட்டிகளில் “ஹாட்ரிக்” தோல்வியடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளன.
இதில் மும்பை அணி பல சீசன்களில் வழக்கமாக தொடக்க ஆட்டங்களில் தோல்வியையே பெரும்பாலும் தழுவியுள்ளது. ஆனால் அடுத்த ஆட்டங்களில் மிகப் பலமாக மீண்டெழுந்து கோப்பையை தன்வசமாக்கிய வரலாறு மும்பைக்கு உண்டு. இந்த வரலாறுக்கு 2021 சீசன் மட்டும் விதிவிலக்காக மாறியது. தொடர்ந்து தோல்வியை தழுவி ப்ளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது மும்பை அணி.
மும்பை இந்தியன்ஸ் புள்ளிப் பட்டியலில் தாமதமாக எழுச்சி பெறும் என்று பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சோயப் அக்தர் கூறியுள்ளார்.