
இந்திய கிரிக்கெட்டில் அடுத்த கபில் தேவாக பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, ஃபிட்னெஸ் பிரச்னையால் கடந்த 2 ஆண்டுகளில் பெரும்பாலான போட்டிகளை தவறவிட்டார். இந்திய அணியின் நட்சத்திர வீரராக, அதிரடி ஆல்ரவுண்டராக தனக்கென நிரந்தர இடத்தை பிடித்து வைத்திருந்த ஹர்திக் பாண்டியா, அதை இந்த 2 ஆண்டில் தவறவிட்டார்.
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவின் ஆல்ரவுண்டர் இடத்திற்கு தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், வெங்கடேஷ் ஐயர் ஆகிய வீரர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர்.
ஹர்திக் பாண்டியாவை வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பாத இந்திய அணி, அவர் ஃபிட்னெஸை அடைந்தபோதிலும் அவரை அணியில் எடுக்காமல், அவர் முழுக்க முழுக்க 100 சதவிகித ஃபிட்னெஸை அடைய ஏதுவாக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பிவைத்தது. அங்கு கடும் பயிற்சியில் ஈடுபட்ட ஹர்திக் பாண்டியா, பந்துவீசுமளவிற்கான முழுமையான ஃபிட்னெஸுடன் ஐபிஎல்லுக்கு திரும்பினார்.