Advertisement

தான் பந்துவீசியதிலேயே இவர் தான் மிகக்கடினமான பேட்ஸ்மேன்; ஆனால் அது சச்சினோ , லாராவோ கிடையாது - சோயப் அக்தர்!

தான் பந்துவீசியதிலேயே மிகக்கடினமான பேட்ஸ்மேன் இலங்கையின் முத்தையா முரளிதரன் தான் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 14, 2021 • 13:35 PM
Shoaib Akhtar reveals the 'toughest' batsman he had bowled to
Shoaib Akhtar reveals the 'toughest' batsman he had bowled to (Image Source: Google)
Advertisement

சர்வதேச கிரிக்கெட்டிற்கு பாகிஸ்தான் கொடுத்த மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் சோயப் அக்தர். சர்வதேச கிரிக்கெட்டில், அதிவேக பந்து இவர் வீசியதுதான்(161.3 கிமீ). அந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. தனது தோற்றம், பவுண்டரி லைனிலிருந்து ஓடிவரும் வேகம், மிரட்டலான பவுலிங் ஆக்‌ஷன் என பல முன்னணி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டவர். 

தனது காலக்கட்டத்தில் ஆடிய சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட், சங்கக்கரா, ஜெயவர்தனே, கங்குலி, ஜாக் காலிஸ், கிரேம் ஸ்மித், பீட்டர்சன், டிவில்லியர்ஸ், தோனி ஆகிய பல சிறந்த பேட்ஸ்மேன்களை தனது வேகத்தினால் மிரட்டியவர். 

Trending


இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 46 சர்வதேச டெஸ்ட், 163 ஒருநாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சோயப் அக்தர் மொத்தமாக 444 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பல தலைசிறந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசியுள்ள அக்தர், சிறந்த பேட்ஸ்மேன்களையே தனது பவுன்ஸர்கள் மற்றும் மிரட்டலான பவுலிங்கால் தெறிக்கவிட்டவர். அப்படியிருக்கையில், எதிரணியின் டெயிலெண்டர்களை எப்படி மிரட்டியிருப்பார் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. 

இந்திய டெயிலெண்டர்கள், தங்களது விக்கெட்டை வேண்டுமானால் வீழ்த்திக்கொள்ளுங்கள்; ஆனால் உடம்பில் தாக்கிவிட வேண்டாம் என்று கெஞ்சியதாக அக்தர் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.

அந்தவகையில், அதேமாதிரி கெஞ்சிய டெயிலெண்டரான முத்தையா முரளிதரன் தான், தான் பந்துவீசியதிலேயே மிகக்கடினமான பேட்ஸ்மேன் என்று கூறி சச்சின், லாரா, பாண்டிங், டிராவிட் ஆகிய ஜாம்பவான்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் சோயப் அக்தர்.

இதுகுறித்து பேசியுள்ள அக்தர்,“நான் பந்துவீசியதிலேயே மிகக்கடினமான பேட்ஸ்மேன் என்றால் அது முத்தையா முரளிதரன் தான். என்னை கொன்றுவிடாதே என்று என்னிடம் கூறுவார். நீ(அக்தர்) பவுன்ஸரில் என்னை தாக்கினால் நான் செத்துவிடுவேன்; அதனால் பந்தை சாதாரணமாக பிட்ச் செய்து வீசு; நான் அவுட்டாகிவிடுகிறேன் என்பார். நானும், அவரட்து பேச்சை நம்பி வீசுவேன். அதை அடித்துவிட்டு, எதேச்சையாக அடித்துவிட்டேன் என்பார். எனவே முரளிதரன் தான் நான் பந்துவீசியதிலேயே மிகக்கடினமான பேட்ஸ்மேன்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement