Advertisement
Advertisement
Advertisement

அணி வீரர்கள் சுதந்திரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றுவிட்டனர் - ஈயான் மோர்கன்!

அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் மட்டுமே எங்களால் வெற்றிபெற முடிந்தது என கேகேஆர் அணி கேப்டன் ஈயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 14, 2021 • 12:00 PM
Should've Been A Lot Easier After The Start We Got: KKR Captain Morgan
Should've Been A Lot Easier After The Start We Got: KKR Captain Morgan (Image Source: Google)
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நடப்பு 14ஆவது ஐபிஎல் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் இந்த இறுதிப் போட்டியில் விளையாட இரண்டாவது அணியாக செல்லப் போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2ஆவது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணியானது கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 135 ரன்கள் மட்டுமே குவித்தது. அதன் பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றிக்கு சென்றது. இதன் மூலம் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி விளையாட இருக்கிறது.

Trending


இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் கூறுகையில், “நாங்கள் இந்த போட்டியின் கடைசி நான்கு ஓவர்களில் நடந்த நிகழ்வை மறக்க விரும்புகிறோம். எங்களது தொடக்க வீரர்கள் சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இருப்பினும் இறுதியில் போராடி வெற்றி பெற்றுவிட்டோம். இந்த போட்டியில் வெற்றி பெற்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இது போன்ற சுவாரசியமான கிரிக்கெட் போட்டிகளில் இறுதிநேர வெற்றி என்பது முக்கியமான ஒன்றுதான்.

கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற போது பவுலிங் சைடுக்கு தான் அதிக சாதகமாக இருந்தது. அந்த நிலையில் நாங்கள் சற்று வருத்தப்பட்டாலும் திரிப்பாதி சிறப்பாக சிக்சர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுவிட்டார். இதே போன்று அவர் பலமுறை எங்கள் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். எங்கள் அணியின் வீரர்கள் இந்த போட்டியில் சுதந்திரமாக விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

வீரர்கள் மட்டுமின்றி அணியின் நிர்வாகிகள், ஊழியர்கள் என அனைவரும் நல்ல சூழ்நிலையை அமைத்து கொடுப்பதால் எங்களால் தொடர்ச்சியான வெற்றிகளைக் பெற்றுக் கொடுக்க முடிகிறது” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement