Advertisement

பேட்டிங்கில் போதுமான ரன்களைச் சேர்க்கவில்லை - பாட் கம்மின்ஸ்!

வான்கடே போன்ற மைதானத்தில் நீங்கள் எவ்வாளவு ரன்களைச் சேர்த்தாலும் எதிரணியை கட்டுப்படுத்துவது எளிதானது அல்ல என சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 07, 2024 • 12:59 PM
பேட்டிங்கில் போதுமான ரன்களைச் சேர்க்கவில்லை - பாட் கம்மின்ஸ்!
பேட்டிங்கில் போதுமான ரன்களைச் சேர்க்கவில்லை - பாட் கம்மின்ஸ்! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து முதல் விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இதில் தடுமாற்றத்துடன் விளையாடிய அபிஷேக் சர்மா 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த  மயாங்க் அகர்வால் 5 ரன்னில் அவுட் ஆனார். மறுபக்கம் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்னில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தறவிட்டார். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரெட்டி 20, கிளாசன் 2, யான்சன் 17, ஷபாஸ் அகமது 10, சமத் 3 ரன்கல் என அடுத்தடுத்து நடையை கட்டினர்.

Trending


இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் பாட் கம்மின்ஸ் இறுதியில் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாசினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாட் கம்மின்ஸ், 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 33 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன், ரோஹித் சர்மா ரமந்தீர் சிங் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்குத் திரும்பினர். இதனால் மும்பை அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். 

இப்போட்டியில் அபார ஆட்டதை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சதமடித்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “இன்றைய போட்டியில் நாங்கள் ரன்களை குறைவாக எடுத்ததாக நினைக்கிறேன். வான்கடே போன்ற மைதானத்தில் நீங்கள் எவ்வாளவு ரன்களைச் சேர்த்தாலும் எதிரணியை கட்டுப்படுத்துவது எளிதானது அல்ல. இருப்பினும் இந்த போட்டியின் தொடக்கத்தில் பந்துவீச்சாளர்களுக்கு உதவி இருந்தது. சன்விரை இம்பேக்ட் வீரராக களமிறக்கியதால் தான் 170 ரன்களை சேர்க்க முடிந்ததாக நினைக்கிறேன்.

இல்லையென்றால் 150 ரன்கள் தான் சேர்த்திருப்போம். இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்று தீவிரமாக இருந்தோம். ஆனால் டி20 கிரிக்கெட் நாம் நினைத்தது போல் நடக்காது. இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்த போட்டிகளை நாங்கள் எங்கள் மைதானத்தில் விளைடாவுள்ளதால் அது எங்களுக்கு சாதகமாக இருக்கும். நிச்சயம் அடுத்த சில போட்டிகள் சிறப்பானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement