
SL trying to convince Jayawardene to take U-19 coaching job: Aravinda de Silva (Image Source: Google)
கடந்த 20 ஆண்டுகளில் இலங்கை அணி ஜெயசூர்யா, சங்கக்காரா, மலிங்கா, ஜெயவர்த்தனே, தில்சன் என பல ஜாம்பவான்காளை உள்ளடக்கிய அணியாகவும், சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் வலிமை வாய்ந்த அணியாகவும் திகழ்ந்தது.
ஆனால் அவர்களுக்கு பிறகு இலங்கை அணியின் தற்போதைய நிலையானது, அகல பாதாளத்திற்கு சென்றுள்ளது. திறமையான வீரர்கள் அணியில் இருந்தாலும் அவர்களால் தொடர்ந்து சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்த முடியாததே அந்த அணி சரிவிற்கு காரணமாக அமைந்துள்ளது.
இதன் விளையவாக நடப்பாண்டு உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் தகுதி சுற்று போட்டிகளில் விளையாடும் அளவிற்கு இலங்கை அணி தள்ளப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அண்டர் 19 அணிகளுக்கு அனுபவம் வாய்ந்த பயிற்சியாளரை நியமிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.