
SL vs IND : Deepak Chahar's heroics with the bat seal a three-wicket victory for the Team India (Image Source: Google)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதபடி களமிறங்கிய இலங்கை அணிக்கு அவிஷ்கா ஃபெர்னாண்டோ அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தார். பின்னர் 50 ரன்களில் ஃபெர்னாண்டோ ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் களமிறங்கிய சரித் அசலங்கா - கருணரத்னே இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்களை எடுத்தது.