
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்றிருந்த ருத்துராஜ் கெய்க்வாட், நேற்று இரவு போட்டி விரைவில் முடிந்ததால், அன்று இரவே டெல்லியிலிருந்து பஞ்சாப்க்கு புறப்பட்டு சென்றார் . எந்த இடைவெளியும், ஓய்வும் இல்லாமல் மொஹாலி சென்ற ருத்துராஜ், சர்வீசஸ் அணிக்கு எதிரான சையித் முஷ்டாக் அலி கோப்பை லீக் ஆட்டத்தில் மஹாராஷ்டிரா விளையாடினார்.
இப்போட்டியில் டாஸ் வென்ற சர்வீஸ் அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து மகாராஷ்டிரா அணியின் கேப்டனான ருத்துராஜ் தொடக்க வீரராக களமிறங்கினார். ருத்துராஜை தவிர மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ரன் சேர்க்கவில்லை. யாஷ் நகர் 1 ரன்னில் ஆட்டமிழக்க, ராகுல் திரிபாதி 19 ரன்களில் வெளியேறினார்.
இதே போன்று நௌசாத் 24 ரன்களும், அசீம் காசி 13 ரன்களும் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் ருத்துராஜ் கெய்க்வாட் தனது வழக்கமான அதிரடியை காட்டினார். 2 நாட்களுக்கு முன்பு பேட்டிங்கில் சொதப்பி அணியிலிருந்து நீக்கப்பட்டவாரா, தற்போது இப்படி ஆடுகிறார் என்று காண்போரை வியப்பில் ஆழ்த்தியது ருத்துராஜ் இன்னிங்ஸ்.