
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிகெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு பிரியன்ஷ் ஆர்யா - யாஷ் துல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யாஷ் துல் 11 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 29 ரன்கள் எடுத்த கையோடு பிரியன்ஷ் ஆர்யாவும் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஆயூஷ் பதோனி 19 ரன்களையும், ஹிமாத் சிங் 15 ரன்களையும் சேர்த்த நிலையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் இணைந்த அனுஜ் ராவத் மற்றும் மயங்க் ராவத் இணை பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் 24 ரன்களில் மயங்க் ராவத் விக்கெட்டை இழக்க, இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அனுஜ் ராவத் 33 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே சேர்த்தது. மத்திய பிரதேச அணி தரப்பில் வெங்கடேஷ் ஐயர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.