Advertisement

வெற்றியுடன் நாடு திரும்ப உத்வேகத்துடன் உள்ளோம் - இஷ் சோதி!

தொடரை வெற்றியோடு நிறைவு செய்தால் மிகச்சிறப்பாக இருக்கும். அதை செய்யும் உத்வேகத்துடன் எங்களது வீரர்கள் காத்திருக்கிறார்கள் என நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் இஷ் சோதி தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 05, 2023 • 21:51 PM
வெற்றியுடன் நாடு திரும்ப உத்வேகத்துடன் உள்ளோம் - இஷ் சோதி!
வெற்றியுடன் நாடு திரும்ப உத்வேகத்துடன் உள்ளோம் - இஷ் சோதி! (Image Source: Google)
Advertisement

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சிலெட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் வங்கதேசம் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை காலை தாக்காவில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி வென்றுள்ளதால இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது. மறுமக்கம் முந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நியூசிலாந்து அணி விளையாடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Trending


இதையொட்டி நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோதி அளித்த பேட்டியில், “முதலாவது டெஸ்டில் வங்கதேசம் விளையாடிய விதம் எங்களை முழுமையாக தோற்கடித்து விட்டது. ஆனால் இங்குள்ள சீதோஷ்ண நிலையில் வெற்றிகரமாக செயல்படுவதற்கு எப்படி விளையாட வேண்டும் என்பதை அவர்கள் கற்றுத்தந்துள்ளனர்.

அடுத்த ஆட்டத்தில் அதை நாங்கள் சரியாக செய்வோம் என்று நம்புகிறேன். தொடரை வெற்றியோடு நிறைவு செய்தால் மிகச்சிறப்பாக இருக்கும். அதை செய்யும் உத்வேகத்துடன் எங்களது வீரர்கள் காத்திருக்கிறார்கள். வெற்றியுடன் தாயகம் திரும்புவோம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement