Advertisement
Advertisement
Advertisement

எங்கள் அணி பந்துவீச்சில் அதிக கவனம் செலுத்த வேண்டும் - டெம்பா பவுமா

தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. 

Advertisement
South Africa leaning heavily on its bowling attack, admits skipper Bavuma
South Africa leaning heavily on its bowling attack, admits skipper Bavuma (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 28, 2021 • 10:52 AM

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 28, 2021 • 10:52 AM

இப்போட்டிக்கு பிறகு பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா, தங்கள் அணி பந்துவீச்சில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். 

Trending

இதுகுறித்து பேசிய அவர், “இப்போட்டியில் தோல்வியடைந்தது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனெனில் இதனை நாங்கள் விரும்பவில்லை. அணியிலுள்ள சக வீரர்களிடம் நாங்கள் நிறைய ஆலோசிக்க உள்ளது. 

இனி வரும் போட்டிகளில் நாங்கள் ஒரு சிறந்த திட்டத்துடன் வர வேண்டும். ஏனெனில் நேற்றைய போட்டியில் நாங்கள் எடுத்த ரன் போதுமென நினைத்தோம். ஆனால் அது முற்றுலும் தலைகீழாக மாறிவிட்டது.

ஏனெனில் எங்களது பந்துவீச்சு பெரிதும் ஏமாற்றமளித்தது. அதனால் நாங்கள் பந்துவீச்சில் அதிக கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். அப்படி செலுத்தினால் மட்டுமே நாங்கள் இனி வரும் போட்டிகளில் வெற்றிபெற முடியும்” என தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement