Advertisement

உலகக்கோப்பை 2023: ஃபாஃப் டூ பிளெசிஸ் கணித்த கோப்பையை வெல்லும் மூன்று அணிகள் இதுதான்!

தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் இந்த உலகக் கோப்பை கைப்பற்ற சாதகமான அணிகள் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 03, 2023 • 20:10 PM
உலகக்கோப்பை 2023: ஃபாஃப் டூ பிளெசிஸ் கணித்த கோப்பையை வெல்லும் மூன்று அணிகள் இதுதான்!
உலகக்கோப்பை 2023: ஃபாஃப் டூ பிளெசிஸ் கணித்த கோப்பையை வெல்லும் மூன்று அணிகள் இதுதான்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை ஐசிசி-யின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும் என்று ஐசிசி ஏற்கனவே கெடு விதித்துள்ளதால் தற்போது அனைத்து நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணிகளை அறிவிக்க தயாராக இருக்கின்றன.

இந்நிலையில் எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடரில் எந்த அணி வெற்றி பெறும்? எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்? எந்த பந்துவீச்சாளர் அதிக விக்கெட்டுகளை எடுப்பார்? எந்த பேட்ஸ்மேன் அதிக ரன்களை குவிப்பார் என முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கணிப்புகளை வெளிப்படையாக அறிவித்து வருகின்றனர்.

Trending


அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணியை உலக கோப்பையில் வழிநடத்திய ஃபாஃப் டூ பிளெசிஸ் தற்போது எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடரை கைப்பற்றும் வாய்ப்புள்ள மூன்று அணிகள் குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்துள்ளார். அதில் அவர் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியின் பெயரை குறிப்பிடாதது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய அவர், “என்னை பொறுத்தவரை இம்முறை தென் ஆப்பிரிக்க அணிக்கு உலக கோப்பையை கைப்பற்ற நல்ல வாய்ப்பு உள்ளதாகவே கருதுகிறேன். ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணி நல்ல செட்டிலான வீரர்களை கொண்டுள்ளது. அதோடு இந்தியாவில் அவர்களது சொந்த மண்ணில் போட்டிகள் நடைபெறுவதால் அவர்களை வீழ்த்துவது என்பது கடினமான ஒன்று எனவே இந்தியாவும் கோப்பையை வெல்ல தகுதியான ஒரு அணியாக கருதுகிறேன்.

மேலும் அதிக முறை ஐசிசி கோப்பைகளை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணியும் அனைத்து அணிகளுக்கும் சவாலாக இருக்கும். எனவே தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் இந்த உலகக் கோப்பை கைப்பற்ற சாதகமான அணிகள். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி உலக கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் இந்த தொடரில் பங்கேற்க இருக்கிறது.

நல்ல கிரிக்கெட்டை அவர்கள் வெளிப்படுத்தினால் நிச்சயம் இந்த கோப்பையை கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்று வெளிநாடுகளிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றியை பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்பதனால் இந்த தொடரின் மீதான எனது எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement