
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்றது. இப்போடியில் தென் ஆப்பிரிக்க அணியானது அபாரமாக விளையாடி 109 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியானது கைப்பற்றியுள்ளது.
மேலும் இத்தொட்ர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக நடைபெற்றதன் காரணமான, இப்போட்டிக்கு பிறகு புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கை அணிக்கு எதிராக அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணியானது 63.33 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி 59.29 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
அதேசமயம் நேற்றைய தினம் 60.71 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியானது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 57.29 புள்ளிகளுடன் இந்திய அணி மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது. மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தோல்வியைத் தழுவிய இலங்கை அணியானது புள்ளிகளை இழந்த சமயத்திலும், 45.45 புள்ளிகளுடன் தொடர்ந்து நான்காம் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.