
South Africa vs India: Rishabh Pant On The Verge Of Breaking MS Dhoni's Unique Record In Tests (Image Source: Google)
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி 26ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் நியூசிலாந்து டெஸ்ட் தொடரின்போது ஓய்வில் இருந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். தோனியின் ஓய்விற்கு பிறகு இந்திய அணியின் கீப்பராக செயல்பட்டு வரும் பந்த் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது தோனியின் மிகப்பெரிய சாதனையை ஒன்றினை முறியடிக்க ரிஷப் பண்ட் காத்திருக்கிறார். அந்த சாதனை யாதெனில் இதுவரை இந்திய விக்கெட் கீப்பராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை தோனி வைத்திருந்தார்.