
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஒன்றில் இடம்பிடித்திருந்த நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அதேசமயம் குரூப் 2 இல் இடம்பிடித்துள்ள அணிகளில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. அதற்கேற்றது போல் நாளை நடைபெறும் போட்டிகளின் முடிவைக் கொண்டு எந்த இரண்டு அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பது தெரிந்துவிடும்.
அதன்படி அடிலெய்டில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கும் நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, நெதர்லாந்து அணியை எதிகொள்கிறது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றால் நேரடியாக அரையிறுதிச்சுற்றுக்குள் நுழையும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.