
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், 2008 முதல் 2015ஆம் ஆண்டு வரை சிஎஸ்கே அணிக்காக 94 போட்டிகளில் விளையாடியுள்ளார். பின் அடுத்தடுத்த ஆண்டுகளில் பூனே ரைசிங் ஜெயன்ட்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளில் ஆடினார்.
பின்னர் 2020ஆம் ஆண்டு முதல் டெல்லி அணியில் விளையாடி வந்த அவர், தற்போது அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் மீண்டும் சென்னை அணிக்கு திரும்ப விருப்பப்படுவதாக ரசிகர்களின் கேள்வி ஒன்றுக்கு அஸ்வின் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அஸ்வின், “சிஎஸ்கே என் மனதிற்கு மிகவும் நெருக்கமான அணி. சிஎஸ்கேவில் விளையாடியது பள்ளிக்கூடத்தில் படித்தது போன்ற அனுபவம். சிஎஸ்கே அணியில் விளையாடிய பின் பிற அணிகளுக்காக விளையாட சென்று விட்டேன். எங்கே சென்றாலும் இறுதியில் வீட்டிற்கு திரும்ப தான் அனைவரும் விரும்புவர்.