
'Spoon-Feeding Doesn't Really Help Captain': MS Dhoni Reveals Why Jadeja Left CSK Captaincy (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசன் தொடங்குவதற்கு முன் தோனி, கேப்டன் பதவியை விட்டு விலகினார். இதனையடுத்து ஜடேஜாவுக்கு அந்த பொறுப்பு வந்தது. ஆனால் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே, ஜடேஜா தலைமையில் 8 போட்டியில் விளையாடி 6 போட்டியில் தோல்வியை தழுவியது.
இதனையடுத்து, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜடேஜா சனிக்கிழமை அறிவித்தார். இதனால் கேப்டன் பதவி மீண்டும் தோனிக்கு வந்தது. இதனை தொடர்ந்து கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இதனால் தோனியை ரசிகர்கள் புகழ்ந்து வந்தனர்.
இதனிடையே வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் தோனி, “நான் எதையும் வித்தியாசமாக இம்முறை போட்டியில் செய்யவில்லை. இன்று பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி, எங்களுக்கு நல்ல இலக்கை வெற்றிக்கரமாக பந்துவீச வழங்கினர். ஆனால் நாங்கள் முதல் 2 ஓவரிலே 25 ரன்கள் விட்டு கொடுத்தோம்.