Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2022: ராஜஸ்தானை தடுப்பது அவ்வளவு எளிதாக இல்லை - கேன் வில்லியம்சன்!

ராஜஸ்தான் அணியை தடுப்பது அவ்வளவு எளிதாக இல்லை. உண்மையில் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என்று எஸ் ஆர் எச் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 30, 2022 • 12:22 PM
SRH Looking To Learn And Improve After Loss Against RR: Kane Williamson
SRH Looking To Learn And Improve After Loss Against RR: Kane Williamson (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் கடந்த சீசன் சரியாக அமையவில்லை. புள்ளிபட்டியலில் இந்த அணிகளும் கடைசி இரண்டு இடங்களை தான் பிடித்திருந்தது.

இந்நிலையில், நேற்று நடந்த இப்போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 61 ரன்கள் வித்தியசத்தில் வீழ்த்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வுசெய்தார்.

Trending


முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ், 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் 55 ரன்களை விளாசினார். மேலும், தேவ்தட் படிக்கல் 41 ரன்களுடனும் ஜாஸ் பட்லர் 35 ரன்களும் எடுத்தனர்.

பிறகு விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத், வேகமாக விக்கெட்டுகளை விட்டு 37 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது. பிறகு மார்க்ராம், ஷெப்பர்ட், வாஷிங்டன் சுந்தர் போன்றோரின் ஆட்டத்தால், ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மார்க்ராம் 57 (41) ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 40 (14) ரன்களும் எடுத்தனர்.

இப்போட்டி முடிந்த பிறகு பேசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், "நாங்கள் தொடங்கிய விதம் நன்றாக இருந்தது. இதற்குமுன் நடந்த போட்டிகளை போலவே தொடக்கத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. எங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், நாங்கள் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. நோ பால்களை தவிர்த்திருக்கலாம். ஒரு நோ பால் என்பது கூடுதல் ரன் மட்டுமல்ல, அது கூடுதல் பந்தையும் கொடுக்கும்.

இந்த ஆட்டம் எங்களின் பக்கம் வரவில்லை. ராஜஸ்தான் அணியை தடுப்பது அவ்வளவு எளிதாக இல்லை. உண்மையில் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். டி20 என்பது இதுதான். நீங்க சிரமப்பட்டு எதிரணியினர் மீது அழுத்தத்தை கொடுப்பீர்கள், ஆனால் 2 ஓவர்களில் அது மாறிவிடும். நாங்கள் தவறுகளை சரி செய்து, அடுத்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். 

உம்ரான் மாலிக் அற்புதமான வீரராக உள்ளார். அவர் இளம் வீரர் என்றாலும் சென்ற ஆண்டு கற்ற அனுபவங்களை நன்றாக பயன்படுத்தினார். அவரின் பந்துவீச்சு வேகமாக உள்ளது. அவர் இவ்வாறே தொடர்ந்தால் நிச்சயம் எதிர்கால இந்திய அணியில் முக்கிய இடத்தை பிடிப்பார்" என கூறினார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement