Advertisement

திரிமான்னேவின் ஓய்வு முடிவை ஏற்றது இலங்கை கிரிக்கெட் வாரியம்!

சமீபத்தில் ஓய்வை அறிவித்த இலங்கை அணியின் நட்சத்திர விரர் லஹிரு திரிமான்னேவின் ஓய்வு முடிவை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்றுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 18, 2023 • 13:23 PM
திரிமான்னேவின் ஓய்வு முடிவை ஏற்றது இலங்கை கிரிக்கெட் வாரியம்!
திரிமான்னேவின் ஓய்வு முடிவை ஏற்றது இலங்கை கிரிக்கெட் வாரியம்! (Image Source: Google)
Advertisement

இலங்கை அணியின் தொடக்க வீரரான லஹிரு திரிமான்னே சமீபத்தில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். திரிமான்னே 44 டெஸ்ட்களில் 2088 ரன்களும், 127 ஒருநாள் போட்டிகளில் 3,194 ரன்களும், 26 டி20 போட்டிகளில் விளையாடி 291 ரன்களும் குவித்துள்ளார். கடந்த் 2010ஆம் ஆண்டு மிர்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான திரிமான்னே தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். அவர் 2013 இல் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். 

அதன்பின் கடந்த 2014ஆம் ஆண்டு இலங்கை அணி ஆசிய கோப்பையை வென்ற போது அந்த தொடரில் இரண்டு சதங்கள் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் 2014 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியிலும் அங்கம் வகித்தார். அவர் இறுதியாக சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 

Trending


இவர் இலங்கை அணிக்காக 5 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். கடந்த ஒரு வருட காலமாக அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் "ஒரு வீரராக நான் எனது சிறந்த ஆட்டத்தை வழங்கினேன். என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். விளையாட்டிற்கு மதிப்பளித்துள்ளேன். எனது தாய்நாட்டிற்கு எனது கடமையை நேர்மையாகவும் முறையாகவும் செய்துள்ளேன். இது கடினமான முடிவு. 

இந்த முடிவை எடுக்க என்னைப் பாதித்த காரணங்களை என்னால் இங்கு குறிப்பிட முடியாது. மேலும் எனக்கு ஆதரவளித்த இலங்கை அணியின் உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள், அணியினர், பிசியோக்கள் மற்றும் ஆய்வாளர்கள் அனைவருக்கும் நன்றி " என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ,'நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றதற்கு நன்றி. மேலும் 13 வருட அற்புதமான நினைவுகளுக்கு மிக்க நன்றி மற்றும் எனது பயணம் முழுவதும் என்னை வாழ்த்தியவர்களுக்கும் நன்றி'எனப் பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் செயற்குழு கூட்டத்தின்போது திரிமான்னேவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. திரிமான்னேவின் ஓய்வு குறித்து சிஇஓ ஆஷ்லி டி சில்வா கூறுகையில், “திரிமான்னேவின் எதிர்கால முயற்சிகளில் சிறந்து விளங்க வாழ்த்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறோம். மேலும் அனைத்து வகையான விளையாட்டுகளையும் உள்ளடக்கிய இலங்கை கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய சேவைகள் நினைவுகூரப்படும்” என தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement