
எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இதன் முடிவில் இரண்டு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். தன்படி இன்று நடைபெற்று வரும் முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ் மற்றும் உஸ்மான் கானி ஆகியோர் களம் இறங்கினர். முத்ல் விக்கெட்டுக்கு அருமையான தொடக்கம் தந்த இந்த ஜோடி அணியின் ஸ்கோர் 42 ரன்னாக இருந்த போது பிரிந்தது. அந்த அணியில் குர்பாஸ்28 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இதையடுத்து இப்ராகிம் ஜாட்ரான் களம் புகுந்தார். அதிரடியாக ஆடிய இப்ராகிம் ஜாட்ரான் 22 ரன்னுக்கு அவுட் ஆனார்.