
Sri Lanka New Captain Dasun Shanaka Says Series Against India Without Seniors A Major Challenge (Image Source: Google)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 18) கொழும்புவில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக தசுன் ஷானகா நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் அனுபவ வீரர்களான மேதியூஸ், சண்டிமல், குசால் பெரேரா ஆகியோ தொடரிலிருந்து விலகியும், குசால் மெண்டிஸ், டிக்வெல்லா, குணத்திலகா ஆகியோர் பயோ பபுள் விதிகளை மீறிய குற்றத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டும் உள்ளனர்.
இதன் காரணமாக பரீட்சையமில்லாத இலங்கை அணியை நேற்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்நிலையில், அனுபவ வீரர்களின்றி இந்திய அணியை எதிர்கொள்வது பெரும் சவாலாக இருக்குமென இலங்கை அணியின் கேப்டன் ஷானகா தெரிவித்துள்ளார்.