
நடுவானில் எரிபொருள் காலி; இந்தியாவில் தரையிறங்கிய இலங்கை வீரர்கள்!இளம் வீரர்களை கொண்ட ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்த தொடருக்காக இந்திய அணி கடந்த 2ஆம் தேதியே இலங்கை சென்றுவிட்ட நிலையில், இலங்கை வீரர்கள் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வந்தனர். கடந்த 4ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தொடரில் தோல்வியை சந்தித்த இலங்கை அணி நேற்றைய தினம் இலங்கை திரும்பினர்.
இந்நிலையில் அவர்கள் இங்கிலாந்தில் இருந்து நேரடியாக இந்தியாவுக்கு சென்றுவிட்டு, அதன் பின்னர் தான் தாய் நாட்டிற்கு திரும்பினார்கள் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியானது. இந்திய அணி வீரர்கள் இலங்கையில் இருக்கும் போது, அவர்கள் ஏன் இந்தியாவுக்கு சென்றனர். போட்டிகள் எங்கு நடக்கிறது என்பது கூட மறந்துவிட்டார்களா என ரசிகர்கள் காரணம் தெரியாமல் விமர்சித்து வந்தனர்.