
Sri Lanka's Analyst Niroshana Tests Positive Ahead Of India Series (Image Source: Google)
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. முதலில் ஒருநாள் போட்டிகளும், அதைத்தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன.
இத்தொடருக்கான இந்திய அணி கடந்த மாதம் இலங்கை சென்று தற்போது பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணியும் நாடு திரும்பியுள்ளது.
இந்நிலையில், இலங்கை அணியில் நேற்றைய தினம் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த அணியின் தரவு பகுப்பாய்வாளர் ஷிராந்தா நிரோஷனாவுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.