Advertisement

இந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை வீரர்கள்?

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பயோ பபுள் சூழலை விட்டு வெளியேறிய மூன்று இலங்கை வீரர்களும், அடுத்த மாதம் இந்திய அணியுடனான தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan June 30, 2021 • 18:46 PM
Sri Lanka's 'Terrible Trio' Dropped From Upcoming Series Against India
Sri Lanka's 'Terrible Trio' Dropped From Upcoming Series Against India (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி, இங்கிலாந்து அணியிடம் தொடரை இழந்தது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு முந்தைய தினம், இலங்கை அணியின் குசால் மெண்டிஸ், நிரோஷன் டிவெல்லா, தனுஷ்கா குணதிலகா ஆகியோர் பயோ பபுள் சூழலை விட்டு, பொது இடங்களுக்கு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

Trending


அதன்பின் குற்றஞ்சாட்டப்பட்ட வீரர்களும் தவறை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்கள் இங்கிலாந்து தொடரிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும் நேற்று அந்த மூன்று வீரர்களும் இலங்கை சென்றடைந்தனர். 

இந்நிலையில், அணியின் பாதுக்காப்பு சூழலை மீறி அனுமதியின்றி வெளியேறியதாக குசால் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்லா, தனுஷ்கா குணதிலகா ஆகியோருக்கு ஓராண்டு தடை விதிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியன.

இத்தகவலை உறுதிப்படுத்தும் வகையில், பயோ பபுள் சூழலை விட்டு வெளியேறிய மூன்று இலங்கை வீரர்களும், அடுத்த மாதம் இந்திய அணியுடனான தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு நிச்சயம் ஓராண்டு தடை விதிக்கப்படுவது உறுதி என சமூக வலைதளங்களில் கருத்துகள் உலாவருகின்றன.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement