
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் முக்கியமான வீரர் கேல் வில்லியம்சன் விளையாடினார். குஜராத் அணியின் பவுலிங்கின் போது, ருதுராஜ் கெய்க்வாட் அடித்த சிக்சரை பிடிக்க முயன்ற போது, அவரது காலில் காயம் ஏற்பட்டது. மைதானத்தில் இருந்தே மற்ற வீரர்களின் உதவியுடன் தான் கேன் வில்லியம்சன் வெளியேறினார். அதுமட்டுமல்லாமல் குஜராத் அணிக்காக அவர் களமிறக்கப்படவில்லை.
அவருக்கு பதிலாக தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்பட்டார். இதனால் கேன் வில்லியம்சனின் காயம் குறித்து கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில் கேல் வில்லியம்சன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மொத்தமாக தொடரில் இருந்தே விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குஜராத் அணி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏனென்றால் அகமதாபாத் மைதானத்திற்கு ஏற்ப ஆடும் பேட்ஸ்மேன் என்பதாலேயே கேன் வில்லியம்சனை குஜராத் அணி ஏலத்தில் வாங்கியது. ஆனால் அவர் முதல் போட்டியோடு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் கேன் வில்லியம்சனுக்கு மாற்று வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தது.