2022ஆம் ஆண்டுக்கான 15ஆவது சீசன் ஐபிஎல் போட்டி மும்பை மற்றும் புனே மைதானங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த 26-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், இதுவரை 20 லீக் போட்டிகள் நிறைவடந்துள்ளது. இன்று நடைபெறும் 21-வது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், நேற்று நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ அணிகள் பரபரப்பாக ஆட்டத்தை வெல்லும் முனைப்பில் ஈடுபட்டிருந்தன. அப்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போது வர்ணனையாளராக பணிபுரிந்து வரும் சுனில் கவாஸ்கர் நகைச்சுவையாக பேசிய சம்பவம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது வர்ணனையாளராக சுனில் கவாஸ்கர் பேசும் விஷயங்கள் சில சமயம் எதிர்ப்பை கிளப்பினாலும், சில சயமங்களில் நகைச்சுவையுடன் அமைந்துவிடும்.