Advertisement

இந்திய அணியில் எனக்கான கதவுகள் அடைக்கப்படவில்லை - சட்டேஷ்வர் புஜாரா!

உள்ளூர் கிரிக்கெட் சீசனில் சிறப்பாக விளையாடி அதிக ரன்களை சேர்த்தால் இந்திய அணியில் கம்பேக் கொடுக்க முடியும் என்று நினைக்கிறேன் என்று இந்திய அணி வீரர் சட்டேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 13, 2023 • 15:52 PM
இந்திய அணியில் எனக்கான கதவுகள் அடைக்கப்படவில்லை - சட்டேஷ்வர் புஜாரா!
இந்திய அணியில் எனக்கான கதவுகள் அடைக்கப்படவில்லை - சட்டேஷ்வர் புஜாரா! (Image Source: Google)
Advertisement

சமீபத்தில் நடந்துமுடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவி கோப்பையை இழந்தது. முன்னதாக கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் நியூசிலாந்திடம் தோல்வியைச் சந்தித்தது. இதனால் இந்திய அணியின் பேட்டிங்கில் பலமாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

அதன் ஒருபகுதியாக இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்றழைக்கப்பட்ட சட்டேஷ்வர் புஜாரா அதிரடியாக நீக்கப்பட்டு, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்தி, தனது வருகையை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

Trending


இந்நிலையில், இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட புஜாரா தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கவுண்டி கிரிக்கெட் தொடரில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி, அபார ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். அதிலும் குறிப்பாக தற்போது நடைபெற்றுவரும் கவுண்டி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்த சதங்களைப் பதிவுசெய்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதுவரை டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த புஜாரா, தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அபாரமாக செயல்பட்டுவருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆட்டம் குறித்து புஜாரா பேசுகையில், இந்திய அணியில் எனக்கான கதவுகள் அடைக்கப்படவில்லை என்று பார்க்கிறேன். அடுத்த உள்ளூர் கிரிக்கெட் சீசனில் சிறப்பாக விளையாடி அதிக ரன்களை சேர்த்தால் இந்திய அணியில் கம்பேக் கொடுக்க முடியும் என்று நினைக்கிறேன். ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற பசி எனக்கு அனலாக இருக்கிறது. அதனால் என்னுள் இன்னும் கிரிக்கெட் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதை பற்றி கவனத்தில் கொள்ளவில்லை. வழக்கம் போல் ஒவ்வொரு போட்டியாக அணுகி வருகிறேன். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடி, ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதே எனது திட்டமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement