
Sunrisers Hyderabad donate Rs 30 crore to provide relief to those affected by 2nd wave of COVID-19 (Image Source: Google)
கரோனா வைரஸின் இரண்டாவது அலை நாடு முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டு, வீரர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கிரிக்கெட் வீரர்களும், ஐபிஎல் அணிகளும் தங்களால் முடிந்த நிதியுதவிகளை செய்து வருகின்றன.
அந்த வகையில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான சன் குழுமன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ரூ.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.