
Suresh Raina felicitated with the 'Sports Icon' award at Maldives Sports Awards (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு, மாலத்தீவு அரசால் ஸ்போர்ட்ஸ் ஐகான் விருது வழங்கப்பட்டது. கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் நிகழ்த்திய சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக முக்கியமான பிளேயராக தடம் பதித்தவர் சுரேஷ் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ள ரெய்னா, ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.
கடந்த 2011 இல் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதில், சுரேஷ் ரெய்னா இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்திருந்தார்.