Advertisement

நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன் - ஹர்திக் பாண்டியா!

சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்த விதம் அபாரமாக இருந்தது. அவர் களத்தில் இருக்கும் வரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் அழுத்ததில் உள்ளனர் என மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 07, 2024 • 14:03 PM
நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன் - ஹர்திக் பாண்டியா! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து முதல் விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இதில் தடுமாற்றத்துடன் விளையாடிய அபிஷேக் சர்மா 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த  மயாங்க் அகர்வால் 5 ரன்னில் அவுட் ஆனார். மறுபக்கம் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்னில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தறவிட்டார். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரெட்டி 20, கிளாசன் 2, யான்சன் 17, ஷபாஸ் அகமது 10, சமத் 3 ரன்கல் என அடுத்தடுத்து நடையை கட்டினர்.

Trending


இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் பாட் கம்மின்ஸ் இறுதியில் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாசினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாட் கம்மின்ஸ், 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 33 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன், ரோஹித் சர்மா ரமந்தீர் சிங் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்குத் திரும்பினர். இதனால் மும்பை அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். 

இப்போட்டியில் அபார ஆட்டதை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சதமடித்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா,  “நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதில் கவனம் செலுத்த விரும்புகிறோம், ஏனெனில் இந்த போட்டியில் நாங்கள் நினைத்ததை விட 10-15 ரன்கள் கூடுதலாக கொடுத்தோம் என்று நினைக்கிறேன். எங்கள் பேட்டர்கள் பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது. எனது பந்துவீச்சு பற்றி கூறவேண்டும் எனில், நான் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சரியான பகுதிகளில் பந்து வீச விரும்புகிறேன்.

எனது திட்டத்தின் படி நங்கள் பந்துவீசியது உதவியாக இருந்தது. மேலும் பியூஷ் சாவ்லாவை விக்கெட்டிற்கு தகுந்தாற்படி பந்துவீச முடிவு செய்தேன். அவரும் இன்றைய போட்டியில் துல்லியமாக பந்துவீசினர். அதேபோல் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்த விதம் அபாரமாக இருந்தது. அவர் களத்தில் இருக்கும் வரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் அழுத்ததில் உள்ளனர். அவர் எங்கள் அணியில் இருப்பது எங்களது அதிர்ஷ்டம்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement