
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் 28ஆம் தேதி துபாயில் நடக்கிறது.
இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 3 முறை மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் மிரட்டல் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா - ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய இருவரும் ஆடாதது இரு அணிகளுக்கும் பாதிப்பாக அமையும்.
இந்திய அணியிலாவது பும்ரா இல்லாதது அதிக பாதிப்பை கொடுக்காதவகையில் பார்த்துக்கொள்ள நல்ல பவுலர்கள் உள்ளனர். ஆனால் பாகிஸ்தான் அணியில் ஷாஹீன் அஃப்ரிடி தரத்திற்கு நிகரான மாற்று பவுலர் இல்லை. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி மற்றும் ஆசிய கோப்பை தொடர் குறித்து முன்னாள் ஜாம்பவான்கள் கலந்துகொண்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸில் விவாதித்துவருகின்றனர்.