Advertisement

இது வெறும் தொடக்கம் தான் - பாபர் ஆசாம்!

இ்ந்தியஅணியை வென்றுவிட்டதால் உச்ச கட்ட மகிழ்ச்சிக்கு யாரும் செல்ல வேண்டாம். நம்முடைய இலக்கு உலகக் கோப்பை என்று பாகிஸ்தான் அணியினருக்கு கேப்டன் பாபர் ஆசாம் அறிவுறுத்தியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 25, 2021 • 12:11 PM
T20 WC won't be easier just because Pakistan defeated India: Babar Azam
T20 WC won't be easier just because Pakistan defeated India: Babar Azam (Image Source: Google)
Advertisement

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

கடந்த 1992ஆம் ஆண்டு சிட்னியில் விளையாடியதிலிருந்து 50 ஓவர்கள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் 12 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வி அடைந்திருந்திருந்தது. ஆனால், பாகிஸ்தான் அணி முதல் முறையாக நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியை வென்று தனது தாகத்தை தீர்த்துக் கொண்டது.

Trending


இந்நிலையில் வெற்றிக்குப்பின் பேசிய பாபர் ஆசாம்“”அணி வீரர்களை, இந்த வெற்றி அணியில் உள்ள எந்த தனிஒரு வீரரால் கிடைக்கவில்லை. நாம் முழுமையாக போராடியதால், சிறப்பாகச் செயல்பட்டதால் கிடைத்த வெற்றி. இதை இப்படியே விட்டுவிட்டு செல்லக்கூடாது. 

இது நமக்குத் தொடக்கம்தான், இந்திய அணியை வீழ்த்திவிட்டோம் என உச்ச கட்ட மகிழ்ச்சிக்கு செல்லாதீர்கள். நம்முடைய நோக்கம் டி20 உலகக் கோப்பையை வெல்வதாக இருக்க வேண்டும். நாம் எப்போதும் நிலைத்தன்மையில்லாமல் விளையாடுவதை பழக்கமாக வைத்துள்ளோம்.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

அதை இந்த முறை செய்துவிடக்கூடாது. இந்த பழக்கத்தை மாற்ற வேண்டும், நம்புவோம். இந்தியாவுக்கு எதிரான வெற்றிக்கு அனைவருக்கும் வாழ்த்துகள் ஒருபோதும் ஓய்வாகஇருக்கக்கூடாது, 100 சதவீத உழைப்பை வழங்க வேண்டும். அதிகமான உற்சாகத்துக்குச் செல்லாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement