
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலககோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எளிதில் சாய்த்து விடும் என்று கூறப்பட்டது.
ஆனால் அந்த கணிப்புகளை எல்லாம் உடைத்து எறிந்து விட்டது ஆஸ்திரேலிய பெரும் அடியைக் கொடுத்துள்ளது. அதுவும் ஷாஹீன் அஃப்ரிடி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்ற மேத்யூ வேட் அனைவரது மனதிலும் இடம் பிடித்து விட்டார்.
இதையடுத்து நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது அண்டை நாடான நியூஸிலாந்துடன் மோதுகிறது. இந்த நிலையில் இப்போட்டியில் டாஸ் பற்றி எங்ககளுக்கு கவலையின்றி அச்சமின்றி விளையாடுவோம் என்று ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.