டி20 உலகக்கோப்பை: அஸ்வினின் அனுபவம் முக்கியம் - பிரெட் லீ!
டி20 உலக கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அஸ்வினை களமிறக்க வேண்டும் என்று பிரட் லீ தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தான் ஆடிய முதல் போட்டியில் (பாகிஸ்தான்) தோல்வியை தழுவிய நிலையில், நாளை நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது.
அதேசமயம் நியூசிலாந்து அணியும் முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளதால், இப்போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்போட்டி கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரட் லீ, இந்திய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வினின் அனுபவம் தேவை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “அஸ்வின் பல டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவருடைய அனுபவம் இந்திய அணிக்கு உதவியாக இருக்கும். அதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அஸ்வினை களமிறக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 11 பேர் கொண்ட இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now