
இந்தியாவின் மிகப்பிரபல உள்ளூர் டி20 லீக் தொடர் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்). உலகம் முழுவது பெருவாரியான ரசிகர்களைக் கொண்டுள்ள ஐபிஎல் தொடர் தான் பிசிசிஐயின் முக்கிய பெருளாதாரம்.
ஐபிஎல் தொடரின் முதல் விளம்பரதாரராக டிஎல்எஃப் 2008 முதல் 2012 வரை இருந்தது. இதன்பின்னர் பெப்சி நிறுவனம் ரூ. 396 கோடியில் 5 வருடங்களுக்கு ஐபிஎல் விளம்பரதாரராகத் தேர்வானது. ஆனால் 2016, 2017ஆம் வருடங்களில் பெப்சியிடமிருந்த ஒப்பந்தம் விவோ நிறுவனத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன்க் காரணமாக வருடத்துக்கு ரூ. 100 கோடி மட்டுமே வழங்கியது விவோ.
பின் 2018 முதல் 2022 வரை ஐபிஎல் போட்டியின் விளம்பரதாரராக விவோ நிறுவனம் மீண்டும் தேர்வானது. அடுத்த 5 வருடங்களுக்கு விவோ நிறுவனம் பிசிசிஐ-க்கு ரூ. 2200 கோடி (வருடத்துக்கு ரூ. 440 கோடி) வழங்குவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. இது உண்மையிலேயே மிகப்பெரிய தொகை. கடந்த ஒப்பந்தத்தை விடவும் 554 சதவிகிதம் அதிகம்.