Advertisement
Advertisement
Advertisement

தோனியின் அந்த சிக்ஸர் தான் எங்கள் வெற்றிக்கு காரணம் - தினேஷ் கார்த்திக்!

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் வெற்றிபெற தோனி அடித்த அந்த ஒரு சிக்ஸர் தான் காரணம் என ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

Advertisement
தோனியின் அந்த சிக்ஸர் தான் எங்கள் வெற்றிக்கு காரணம் - தினேஷ் கார்த்திக்!
தோனியின் அந்த சிக்ஸர் தான் எங்கள் வெற்றிக்கு காரணம் - தினேஷ் கார்த்திக்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 19, 2024 • 04:10 PM

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 19, 2024 • 04:10 PM

இதில் விராட் கோலி 47 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, மறுபக்கம் அரைசதம் கடந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் 54 ரன்கள் சேர்த்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டனார். அதன்பின் களமிறங்கிய விரர்களில் ராஜத் பட்டிதார் அதிரடியாக விளையாடி 41 ரன்களைச் சேர்த்தார். அதேசமயம் அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 14, கிளென் மேக்ஸ்வெல் 16 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். 

Trending

இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் க்ரீன் 38 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களைச் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ரன்கள் ஏதுமின்றியும், டேரில் மிட்செல் 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த ரச்சின் ரவீந்திரா - அஜிங்கியா ரஹானே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரஹானே 33 ரன்களுக்கும், ரச்சின் ரவீந்திரா 61 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். 

அதன்பின் இறுதிவரை போராடிய மகேந்திர சிங் தோனி 3 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜடேஜா 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 42 ரன்களை சேர்த்த போதும், சிஎஸ்கே அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ஆர்சிபி அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டி முடிந்து பேசிய ஆர்சிபி வீர்ர தினேஷ் கார்த்திக்,“சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எங்களுக்கு சாதகமாக நிகழ்ந்த விஷயம் தோனி அடித்த அந்த 110 மீட்டர் சிக்ஸர் தான். அந்த பந்து மைதானத்துக்கு வெளியே போனதால் தான் எங்களுக்கு புதிய பந்து கிடைத்து. ஏனெனில் பழை பந்தானது மிகவும் ஈரத்துடன் பந்துவீச கடினமகா இருந்த நிலையில், புதிய பந்திவில் பந்துவீச சுலபமாக இருந்தது. அது தான் எங்களது வெற்றியை எளிதாக்கியது” என தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement