
பந்துவீச்சு முனையில் நிற்கும் பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர் பந்துவீசும் முன்பே, ரன் ஓட வசதியாக க்ரீஸை விட்டு விலகி நின்று, பவுலர் அவரை ரன் அவுட் செய்தால் அது மன்கட் ரன் அவுட் என்றழைக்கப்பட்டது. ஆட்டத்தின் ஸ்பிரிட்டுக்கு எதிரானது என்ற கருத்து பரவலாக இருப்பதால், மன்கட் ரன் அவுட் பெரும்பாலான பவுலர்கள் செய்யமாட்டார்கள்.
ஆனால் 2019 ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லரை பஞ்சாப் அணியின் முன்னாள் கேப்டனான ரவிச்சந்திரன் அஷ்வின் மன்கட் ரன் அவுட் செய்தார். ஆனால் அஸ்வினின் செயல் தவறானது என்று பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். அஸ்வினுக்கு சிலர் ஆதரவும் அளித்தனர். ஆனால் அஸ்வின் தான் செய்தது விதிகளுக்குட்பட்டதுதான் என்பதில் உறுதியாக இருந்தார்.
இப்போது எம்சிசி மன்கட் ரன் அவுட்டை முறையான ரன் அவுட் என அறிவித்தது. இந்நிலையில், அதுகுறித்து பேசியுள்ள அஸ்வின் பவுலர்களுக்கு அறிவுரை ஒன்றையும் வழங்கியுள்ளார்.