Advertisement
Advertisement
Advertisement

இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடியை தந்தனர் - ரேஜிஸ் சகாப்வா!

இந்திய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ரேஜிஸ் சகாப்வா கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement
The Indian Bowlers Bowled Really Well - Regis Chakabva
The Indian Bowlers Bowled Really Well - Regis Chakabva (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 19, 2022 • 09:48 AM

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து, கேப்டனாக கேஎல் ராகுல் முதல் வெற்றியை ருசித்துள்ளார். முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 189 ரன்களுக்கு சுருண்டது. இதனையடுத்து, இந்திய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 19, 2022 • 09:48 AM

இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய கேஎல் ராகுல், “கிரிக்கெட் விளையாடாமல் இருந்த காலம், மிகவும் கடினமாக இருந்தது என்றார். நாங்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருவதால், எங்களுக்கு காயமும் ஏற்படுவது சகஜம் தான். 

Trending

காயத்தில் இருந்த காலத்தில் நான் , குல்தீப் யாதவ் மற்றும் தீபக் சாஹர் மூன்று பேரும் பெங்களூருவில் ஒன்றாக இருந்து மூன்று பேரும் உடல் தகுதியை மீட்க கடுமையாக போராடினோம். மீண்டும் இந்திய அணிக்குள் வந்தது மகிழ்ச்சி. பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவிசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். அணியாக அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடினோம்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்த பேசிய ஜிம்பாப்வே கேப்டன் ரேஜிஸ் சக்பவா, “இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினோம். எங்களுக்கு கடும் நெருக்கடியை அளித்தார்கள். ஆட்டத்தின் முதல் 5 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அப்போவே ஆட்டம் முடிந்துவிட்டது. எங்கள் அணி தடுமாறி திசையை நோக்கி தெரிந்துவிட்டது. இறுதியில் ரிச்சர்ட், பிராட் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். எங்கள் பேட்ஸ்மேன்கள் அடுத்த போட்டியில் 2 பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட வேண்டும். ஆனால் இன்று அது நடைபெறவில்லை” என்று கூறினார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement