
TNPL 2021 : Chepauk Super Gillies finish with 159 on the board (Image Source: Google)
டிஎன்பிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் 19ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர்.
இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் சேப்பாக் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெகதீசன் - கௌஷிக் காந்தி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கௌஷிக் காந்தி 45 ரன்களில் ஆட்டமிழக்க, ஜெகதீசனும் 40 ரன்களில் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் வந்த வேகத்திலேயே விக்கெட்டை இழந்ததால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தடுமாறியது.